ஜெயலலிதாவின் அழகால் ஈர்க்கப்பட்டேன்.. மார்கண்டேய கட்ஜு சர்ச்சை கருத்து
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தனக்கு இளம் வயதில் ஈர்ப்பு இருந்ததாக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
பாடல் வீடியோ இணைப்புடன் அவர் பதிவு செய்துள்ள இந்த பேஸ்புக் பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் ஒருமுறை இதேபோல ஒரு கருத்தை கட்ஜு கூறியிருந்தார். தற்போது மீண்டும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இளமை காலத்தில்
பேஸ்புக் பதிவில் கட்ஜு கூறியுள்ளதாவது: நான் இளமையாக இருந்தபோது, ஜெயலலிதா மீது ஈர்ப்பு இருந்தது. அவர் மிகவும் அழகானவர் என்று எண்ணியிருந்தேன். ஜெயலலிதாவு அதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இல்லைதான்.
சந்திப்பு
ஜெயலலிதா 1948ம் ஆண்டு பிப்ரவரியில் பிறந்தார். நான் 1946 செப்டம்பரில் பிறந்தேன். 2004 நவம்பர் மாதம்தான் முதன் முதலில் ஜெயலலிதாவை நான் சந்தித்தேன். நான் மெட்ராஸ் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றபோது ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பங்கேற்றார்.
பாடல் வீடியோ
அந்த வயதில் கூட ஜெயலலிதா அழகாகத்தான் இருந்தார். ஆனால், நான் இளமைக் காலங்களில் கண்ட கற்பனைகளை அவரிடம் சொல்லவில்லை. அது பொருத்தமற்றது என்பதை அறிந்திருந்தேன். இவ்வாறு கூறியுள்ள அவர் "பார்வை ஒன்றே போதுமே.." என்ற பாடல் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
சர்ச்சை கருத்துக்கள்
மார்கண்டேய கட்ஜு எப்போதுமே சர்ச்சைகளை விரும்புவர். ஜெயலலிதா குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து கருத்து ஈர்க்க முயல்கிறாரோ என்ற சந்தேகம் வலைவாசிகள் மத்தியில் உள்ளது.