மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை - மனோகர் பரிக்கர்
கோவாவில் ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. மனோகர் பாரிக்கர் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்
பனாஜி: கோவாவில் ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க மொத்தம் 21 இடங்கள் தேவை. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் இழுபறி நிலை நீடித்தது.

பாஜக ஆட்சியமைக்க 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. 10 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற பிற கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது.
அங்கு எம்.ஜி.பி., மற்றும் ஜி.எப்.பி., ஆகிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் தலா மூன்று எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவை பெற பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கோவா சென்று ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து மனோகர் பரிக்கரை முதல்வராக தேர்வு செய்தால் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்.ஜி.பி கட்சி கூறியிருந்தது. இந்த கட்சி கடந்த காலங்களில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
எம்.ஜி.பி.கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் மனோகர் பாரிக்கரை முதல்வராக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. மேலும், கோவா பாஜக எம்எல்ஏக்களின் முடிவு பாஜக தலைவர் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தகவல்கள் வெளியானதுடன் தான் வகித்து வரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. 22 ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் மிருதுளா சின்ஹாவுடன் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மனோகர் பாரிக்கர் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் உறுதி செய்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சி பாஜகவை குற்றம் சாட்டியுள்ளது. சிறிய கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றம் சாட்டினார்.
மனோகர் பரிக்கர் கோவா முதல்வராகும் பட்சத்தில் 6 மாதங்களில் சட்சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும், தனது பெரும்பான்மையையும் நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications