மோடி பிரதமரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்: முதன்முறையாக மனம் திறந்த அத்வானி
அகமதாபாத்: மோடி பிரதமரானால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் எனக் கூறியுள்ளார் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அத்வானி.
பாரதீய ஜனதாக் கட்சியின் அடுத்த பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கப் படுவார் என எதிர்பார்க்கப் பட்டநிலையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் மனக்கசப்படைந்த அத்வானி கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

கடந்த மாதம் போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றிய போது, மோடி, அத்வானியின் கால்களைத் தொட்டு ஆசி வாங்கினார். ஆனால் அத்வானியோ அவருக்கு நேரடியாக ஆசி வழங்காமல், தனது கவனத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அத்வானி, முதல் முறையாக நரேந்திர மோடியை பாராட்டி வெளிப்படையாக பேசியது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விழாவில் அத்வானி பேசியதாவது, ‘மோடி பிரதமர் ஆனால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மோடியிடம் வழக்கத்திற்கு மாறான ஒரு தகுதி உள்ளது. அவர் எப்போதும் புதியனவற்றை செயல்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார். இந்தியாவில மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன" என்றார்.












Click it and Unblock the Notifications