மாயமான ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிப்பு: விமானி, துணை விமானி, போலீஸ் அதிகாரியின் நிலை?
கோன்சா: அருணாச்சல பிரதேசத்தில் மாயமான பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டரின் பாகங்களை இந்திய விமானப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி காலை 10.30 மணிக்கு அருணாச்சல பிரதேச மாநிலம் திராப் மாவட்டத்தில் உள்ள கோன்சாவில் இருந்து 3 பேருடன் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் கிளம்பியது. ஹெலிகாப்டரில் கேப்டன் எம்.எஸ். பிரார், கேப்டன் ராஜீவ் ஹொஸ்கோட்டே மற்றும் திராப் மாவட்ட துணை கமிஷனர் கமலேஷ் குமார் ஜோஷி ஆகியோர் இருந்தனர்.

ஹெலிகாப்டர் கிளம்பிய அரை மணிநேரத்தில் மாயமானது. இதையடுத்து அதை தேடும் பணியில் விமானப்படை விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. 6 நாட்களாக ஹெலிகாப்டரை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திங்கட்கிழமை காலை ஹெலிகாப்டரின் பாகங்கள் கோன்சாவில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பயணித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இது குறித்து பாதுகாப்புத் துறை(ஷில்லாங்) பி.ஆர்.ஓ. கேப்டன் அமித் மஹாஜன் கூறுகையில்,
மாயமான ஹெலிகாப்டரின் பாகங்கள் கோன்சா அருகே கிடப்பது திங்கட்கிழமை காலை 5.20 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையினரின் அயராத முயற்சியால் தான் பாகங்களை கண்டுபிடிக்க முடிந்தது.
அது மலைப்பகுதி என்பதாலும், மரங்கள் அடர்ந்துள்ளதாலும், மோசமான வானிலையாலும் தேடல் பணி தாமதமானது என்றார்.












Click it and Unblock the Notifications