இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை!
பாகிஸ்தான் நாட்டுடன் நடத்த வான்வெளி சண்டையின் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் இந்திய வீரர்கள் மூலம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீநகர்: கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுடன் நடத்த வான்வெளி சண்டையின் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் இந்திய வீரர்கள் மூலம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நடந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் நடக்கலாம் என்ற நிலை நிலவி வந்தது. அப்போது இரண்டு நாடுகளுக்கும் வான் சண்டை நடந்து வந்தது.

புல்வாமா தாக்குதலை அடுத்த நிலவி வந்த கடுமையான பிரச்சனை மற்றும் பாலக்கோடு தாக்குதல் காரணமாக இந்த வான் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் எப் -16 போர் விமானங்கள் நுழைந்து தாக்கியது. 2-3 விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியது.
இந்த தாக்குதலை அடுத்து அந்த பகுதிக்கு வேகமாக இந்தியாவின் போர் விமானங்கள், வேகமாக பாகிஸ்தான் விமானங்களை சுற்றி வளைத்து தாக்கியது. இந்த சம்பவம் நடந்த போது இந்தியாவின் மிக் 17 ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளானது. இதில் இருந்து 6 விமானப்படை வீரர்களும் பலியானார்கள்.
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் எப்படி வெடித்தது என்று தற்போது விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஹெலிகாப்டர் இந்திய ஏவுகணை மூலம்தான் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்திய ஹெலிகாப்டரை பாகிஸ்தானுடையது என்று நினைத்து தாக்கி அழித்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக இந்திய விமானப்படை துறை ரீதியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அதன்படி தற்போது இந்திய விமானப்படையின் ஸ்ரீநகர் Air Officer Commanding தற்போது நீக்கப்பட்டுள்ளார். இன்னும் சிலரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இவர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. முதலில் மிக் 17 ஹெலிகாப்டர் பாகிஸ்தான் தாக்குதலில் வீழ்த்தப்பட்டது என்று கூறப்பட்டது. அதன்பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிக் 17 ஹெலிகாப்டர் வீழ்ந்தது என்று கூறினார்கள்.
இந்த நிலையில் மிக் 17 ஹெலிகாப்டர் இந்திய விமானப்படை மூலமே வீழ்த்தப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்த செய்தி தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications