விமானப்படை விமானி பாவனா கோடியில் ஒருவர்... ஏன் தெரியுமா?
பெங்களூர்: இந்திய விமானப்படையில் இனி பெண்களும் போர் விமானங்களை இயக்கி எதிரிகளின் இலக்குகளை தாக்கலாம். முதல்கட்டமாக பாவனா காந்த், மோகனா சிங், அவனி சதுர்வேதி ஆகிய 3 பெண்கள் விமானப்படையின் தாக்குதல் பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள துண்டிகலில் இருக்கும் விமானப்படை அகாடமியில் வரும் 18ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த மூன்று பெண் விமானிகளும் தாக்குதல் பிரிவில் இணையவுள்ளனர்.
இந்நிலையில் பாவனா காந்த் பற்றி விமானப்படையின் பி.ஆர்.ஓ. விங் கமாண்டர் அனுபம் பானர்ஜி ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,

பாவனா
பாவனா காந்த் பீகாரில் உள்ள தர்பங்காவை சேர்ந்தவர். அவர் பேகுசாராய் நகரில் வளர்ந்தவர். அவரது தந்தை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் என்ஜினியராக உள்ளார். தாய் வீட்டை கவனித்துக் கொள்கிறார்.

படிப்பு
பாவனா டிஏவி பப்ளிக் ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு பெங்களூரில் உள்ள பிஎம்எஸ் பொறியியல் கல்லூரியில் பி.இ.(மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்) படித்தார்.

விமானப்படை
பறவை போன்று சுதந்திரமாக பறக்க வேண்டும் என பாவனா சிறுவயதில் இருந்தே ஆசைப்பட்டார். இதனால் தான் அவர் விமானப்படையில் சேர்ந்தார் என பானர்ஜி தெரிவித்துள்ளார்.

போர் விமானம்
ஸ்டேஜ் -I பயிற்சியை முடித்த பிறகு போர் விமானங்களை இயக்கும் அற்புதமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது தான் என் வாழ்வில் இதுவரை நடந்த நல்ல காரியம். இது ஒரு துவக்கம் தான். நான் நாடுக்காக போராடி நாட்டையும், என் பெற்றோரையும் பெருமையடைய செய்வேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் பாவனா.

பொழுதுபோக்கு
போர் விமானங்களை இயக்க தயாராகியுள்ள பாவனாவுக்கு பேட்மிண்டன், மலையேறுதல், புகைப்படம் எடுத்தல், சமையல், நீச்சல் அடித்தல் மற்றும் பயணம் செய்தல் ஆகியவை பொழுதுபோக்காம்.












Click it and Unblock the Notifications