ஐபி., ரா அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்... காஷ்மீர், பலுசிஸ்தான் விவகாரங்களில் வல்லுநர்கள்!
வெளியுறவு கொள்கைகளை வகுக்கும் அமைப்பான 'ரா' , மத்திய உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் பீரோ எனப்படும் 'ஐபி.', அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
டெல்லி: மத்திய உளவு அமைப்பான ஐ.பி. அமைப்பின் தலைவராக தற்போது பதவி வகிக்கும் தினேஷ்வர் சர்மாவின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் ஜெயினை மத்திய அரசு நியமித்துள்ளது.
ரிசர்ச் அண்ட் அனாலிசஸ் விங் எனப்படும் 'ரா' அமைப்பின் தலைவராக பதவி வகிக்கும் ராஜீந்தர் கன்னாவின் பதவிக் காலமும் விரைவில் நிறைவடையவுள்ளது. இதனால் அந்தப் பதவிக்கு அனில் குமார் தஸ்மானாவை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் 2 பேரின் பதவிக் காலமும் 2 ஆண்டுகள் ஆகும்.

ராஜீவ் ஜெயின்
ஐபி அமைப்பின் தற்போதைய தலைவர் தினேஷ்வர் சர்மாவின் 2 ஆண்டு பதவிக்காலம் இம்மாதம் 31ம் தேதியோடு நிறைவடைகிறது. இதனையடுத்து அந்த பதவிக்கு தற்போது உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வரும் ராஜீவ் ஜெயினை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. 1980ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் ஜெயின், பதற்றம் நிறைந்த காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றியவர்.
குடியரசுத்தலைவர் பதக்கம் பெற்றவர்
முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடனான பேச்சு வார்த்தையில் அரசின் ஆலோசகராக செயல்பட்டவர். ஜனவரி 1ம் தேதியன்று உளவுத்துறையின் தலைவர் பொறுப்பை இவர் ஏற்கிறார்.குடியரசுத்தலைவரின் கையால் பதக்கம் வாங்கியவர் ராஜீவ் ஜெயின்.
ரா அமைப்பு புதிய தலைவர்
ரா அமைப்பின் தற்போதைய தலைவர் ராஜிந்திர கன்னா இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதனால் அந்த பதவிக்கு அனில் குமார் தஸ்மானாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. 'ரா' எனப்படும் வெளியுறவு கொள்கைகளை வகுக்கும் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அனில் குமார் தஸ்மானா,1981ஆம் ஆண்டு பேட்ச் மத்தியபிரதேச மாநில கேடரில் இருந்து ஐபிஎஸ் ஆக தேர்வானவர். ரா அமைப்பில் கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார் அனில் குமார் தஸ்மானா
அனில் குமார் தஸ்வானா
தனது பதவிக் காலத்தில், பலுசிஸ்தான், பாகிஸ்தான் விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்களை அவர் கையாண்டுள்ளார். ரா அமைப்பின் தலைவராக ஜனவரி 30ம் தேதி பதவியேற்க உள்ளார் அனில் குமார் தஸ்மானா. காஷ்மீர் பகுதியில் வாலட்டும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க பலுசிஸ்தான் விவகாரத்தை கையில் எடுத்துள்ள மத்திய அரசு, ரா அமைப்புக்கு அந்த பகுதியில் சிறப்பாக பணியாற்றிய அனில் குமார் தஸ்மானாவை தலைவராக நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரியான நேரத்தில் சரியான தேர்வு
இது குறித்து நமது ஒன் இந்தியா நிருபரிடம் கருத்து கூறிய ரா அமைப்பின் அதிகாரிகள், சரியான நேரத்தில் சரியான நபரை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளில் கடினமான காலங்களில் பணியாற்றிய அனில் குமார் தஸ்மானா ரா அமைப்பின் தலைவராகியிருக்கிறார். அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்று கூறியுள்ளனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications