முதல் முதலாக ரம்ஜானுக்கு கறிக்கடை லீவு.. நவராத்திரியில் உ.பி. ரோடில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து
கான்பூர்: நவராத்திரி திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம், முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றன. கோயில் நகரமான வாரணாசியில் நவராத்திரி நாட்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் அடைக்கப்படவேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, சாலையில் நமாஸ் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று 31ம் தேதி நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. முன்னதாக, ரம்ஜான் பண்டிகையையொட்டி உத்தர பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன..

முன்னதாக, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் இருபிரிவினரை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி கூட்டம் நடத்தினார்கள்.. அப்போது, இஸ்லாமியர்களுக்கு உத்தர பிரதேச மாநில காவல்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தது.
மசூதிக்குள் நமாஸ்
இது தொடர்பாக மீரட் போலீஸ் கமிஷனர் ஆயுஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ரம்ஜான் மாதம் என்றால் இது மிகவும் அதிகமாக இருக்கும். மக்கள் மசூதிக்குள் நமாஸ் செய்யும்படி கேட்டுக்கொள்ளும்படி மத தலைவர்கள் மற்றும் இமாம்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, சாலையில் நமாஸ் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது சாலை மற்றும் தெருவில் நமாஸ் செய்தால் அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படலாம். அப்படி பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டால் புதிய பாஸ்போர்ட் எடுக்க கோர்டில் தடையில்லா சான்று வாங்க வேண்டியிருக்கும். பதட்டமான பகுதிகள் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
சோசியல் மீடியா தீவிரமாக கண்காணிக்கப்படும். வதந்தியைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வருடம் இப்படி விதிகளை மீறிய 200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.
இறைச்சி கடைகளுக்கு தடை
நவராத்திரி பண்டிகை இன்றுமுதல் 9 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், 9 நாள்களுக்கு அனைத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வாரணாசி மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து வாரணாசி மாநகராட்சி சொலலும்போது, "இந்துக்கள் நவராத்திரியை மிகவும் புனிதமாக கருதுவார்கள் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே 9 நாட்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும். நாங்கள் என்ன 360 நாளுமா நிறுத்த சொல்கிறோம்? வாரணாசி ஆன்மீக மற்றும் கலாசார தலைநகரம். தினமும் 2 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். அதனால் பாரம்பரிய நடைமுறை பின்பற்றவேண்டும். எதையும் கட்டாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது'' என்று கூறியிருந்தார்.
முதல்முறையாக கடைகள் அடைப்பு
அந்தவகையில், முதல் முறையாக நவராத்திரிக்கு இறைச்சிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.. இதனால், பண்டிகைக்கு முஸ்லிம்கள் இறைச்சி வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்போது, சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து என்ற அறிவிப்புகளால், இஸ்லாமியர்களிடையே சலசலப்பு எழுந்துள்ளது.
பாஸ்போர்ட்டை ரத்து செய்வது என்ற போலீஸார் முடிவுக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் செளத்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சொல்லும்போது, ''போலீஸார் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வோம் என்று சொல்லக்கூடாது. சாலையை ஆக்கிரமிப்பு இல்லாமல் வைத்துக்கொள்வது நிர்வாகத்தின் பொறுப்பு. இது குறித்து சமுதாயத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவேண்டும்'' என்று கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications