சீனியாரிட்டி முறையை பின்பற்றியிருந்தால் செல்லமேஸ்வர் அப்போவே தலைமை நீதிபதி ஆகியிருப்பாராம்!
சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும் அதிர்ஷ்டசாலிகளே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாகின்றனர்.
Recommended Video

டெல்லி: சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும் அதிர்ஷ்டசாலிகளே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாகின்றனர். சீனியாரிட்டி முறை முறையாக பின்பற்றப்பட்டிருந்தால் நீதிபதி செல்லமேஸ்வர் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பாராம்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடு குறித்து 4 மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை கூறினர்.
வழக்குகள் ஒதுக்கீடு, நீதிமன்ற நிர்வாகம் போன்ற விஷயங்களில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இந்த நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

சீனியாரிட்டி அடிப்படையில்
நீதிபதிகளின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள் சீனியாரிட்டி அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர்.

நீதித்துறையின் புனித தத்துவம்
சீனியாரிட்டி என்பது நீதித்துறையின் புனித தத்துவமாகும். உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சீனியாரிட்டி என்பது முக்கிய உணர்ச்சிமிகு பிரச்சனையாகும்.

அதிர்ஷ்டம் வேண்டும்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சீனியாரிட்டி அடிப்படையிலேயே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். இதேபோல் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் அதிர்ஷ்டசாலிகள் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாகின்றனர்.

பயபக்தியுடன் கடைபிடிப்பு
உயர்நீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றாமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி உயர்த்தப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியிருக்கிறது. சீனியாரிட்டி கொள்கை மிகுந்த பயபக்தியுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் 25 நீதிபதிகள்தான்..
உச்ச நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி உட்பட 31 நீதிபதிகளை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், தற்போது தலைமை நீதிபதி உட்பட 25 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். இவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் ‘சீனியாரிட்டி' வழங்கப்படுகிறது.

செல்லமேஸ்வர்தான்..
உச்சநீதிமன்றத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றால் முதலில் பதவியேற்கும் நீதிபதியை சீனியர் என கருதப்படுவார். அப்படி பார்க்கும் போது உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக செல்லமேஸ்வர்தான் நியமிக்கப்பட வேண்டும்.

பறிக்கப்பட்ட வாய்ப்பு
ஆனால் சீனியாரிட்டி முறை பின்பற்றப்படாதால் செல்லமேஸ்வர் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. செல்லமேஸ்வர் நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு எதிராக குற்றம்சாட்டிய 4 நீதிபதிகளில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு முன் மிஸ்ரா
செல்லமேஸ்வர் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஜூன் 23ஆம் தேதி 1997ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்னதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா 1996ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

தலைமை நீதிபதியான செல்லமேஸ்வர்
நீதிபதி கெஹர் பிப்ரவரி 8ஆம் தேதி 1999ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். ஆனார் செல்லமேஸ்வர் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2007ஆம் ஆண்டு 3ஆம் தேதி உயர்த்தப்பட்டார். ஆனால் கெஹகர் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமும் மிஸ்ரா 2009ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதியும் தான் நியமிக்கப்பட்டனர்.

2 ஆண்டுகள் சீனியர்
ஆனால் நீதிபதி கெஹர் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டார். சீனியாரிட்டி அடிப்படையில் 2 ஆண்டுகள் மூத்தவரான செல்லமேஸ்வர் கொலிஜியம் முறையால் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதிதான் உச்சநீதிமன்ற நீதிபதியானார். அன்றே செல்லமேஸ்வருக்கு முன்னதாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார்.

மீண்டும் விளையாடிய விதி
நீதிபதி செல்லமேஸ்வர் வழியில் மீண்டும் விதி விளையாடியது. உச்சநீதிமன்ற நீதிபதியாக மிஸ்ரா பதவியேற்ற பின்னரே செல்லமேஸ்வர் பதவியேற்றதால் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து சீனியர் நீதிபதியாக உள்ளார் செல்லமேஸ்வர்.

கொலிஜியம் முறைக்கு எதிர்ப்பு
சீனியாரிட்டி முறை ஒழுங்காக பின்பற்றப்பட்டிருந்தால் செல்லமேஸ்வர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதியே நீதிபதி டிஎஸ் தாக்கூரின் ஓய்வுக்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பார். அதாவது நீதிபதி கெஹருக்கு முன்னதாகவே. இதன்காரணமாகவே செல்லமேஸ்வர் கொலிஜியம் முறைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை -
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications