செட்டிலாகிவிட்டோம் என்று தேங்காமல் ரிஸ்க் எடுங்கள்: மாணவர்களுக்கு சுந்தர் பிச்சை டிப்ஸ்
டெல்லி: டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இன்று, மாணவர்களோடு சந்திப்பு நிகழ்த்தினார்.
மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை அளித்த பதில்: எனக்கு கிரிக்கெட்டும், கால்பந்தாட்டமும் பிடிக்கும். ஆனால் டி20 போட்டிகளைவிட ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளையே விரும்புகிறேன்.

கூகுள் சி.இ.ஓவாக பதவி வகிக்காவிட்டால் நான் சாப்ட்வேர் டெவலப் செய்யும் வேலையில்தான் இருந்திருப்பேன். உங்களை யார் உத்வேகப்படுத்துகிறார்களோ, அவர்களுடனேயே எப்போதும் கலந்திருங்கள் என்பதை மாணவர்களுக்கான அறிவுரையாக கூற விரும்புகிறேன்.
ஒரு செயலை செய்யும்போது ரொம்ப வசதியாக உணர்ந்தீர்களானால், நீங்கள் உங்களை தேக்கி வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். பாதுகாப்பற்ற நிலையிலேயே உங்கள் பணிச்சூழல் இருக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.
இந்தியாவில் இப்போது ரிஸ்க் எடுத்து தொழில் செய்யும் மனநிலை வந்துள்ளது. சிலிக்கான் வேலி தொழில்முனைவோருக்கும், இந்திய தொழில்முனைவோருக்கும் வித்தியாசம் எனக்கு தெரியவில்லை.
இந்தியாவில் டீக்கடைகளில் கூட தொழில்முனைவோரை பார்க்க முடியும். சாப்ட்வேர் துறையின் ரத்த நரம்பு, டெவலப்பர்கள்தான். அதிகப்படியான டெவலப்பர்களை கொண்டிருந்தால், அதிகப்படியான பிரச்சினைகளை சமாளிக்கலாம். நமது மாணவர்களுக்கு ரிஸ்க் எடுப்பதன் அவசியத்தை சொல்லி கொடுக்க வேண்டும்.
ஆண்ட்ராய்டு தயாரிப்பு ஒன்றுக்கு, இந்திய உணவுப்பொருள் பெயரை சூட்டலாமே என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆன்லைனில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி உணவு பண்டத்தின் பெயரை வைத்துவிடலாம் (சிரிப்பு).
நான் 1995ல் முதல்முறையாக போன் வாங்கினேன். 2006ல்தான் ஸ்மார்ட் போன் வாங்கினேன். தற்போது வீட்டில் 20-30 ஸ்மார்ட் போன்கள் உள்ளன. கூகுளின் அனைத்து சேவைகளையும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியை கிரிககெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தொகுத்து வழங்கினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications