IFFCO நானோ யூரியா திரவம்.. நவீன விவசாயத்தில் ஒரு கேம் சேஞ்சர்!

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: இந்திய விவசாயம் தொழில்நுட்பம் மற்றும் நிலையான வேளாண் நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு வேகமாக மாறி வருகிறது. இக்காலத்தில் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், இடுபொருள் செலவுகளைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் தீர்வுகளை விவசாயிகள் நாடுகின்றனர். இந்த வளர்ந்து வரும் விவசாயச் சூழலில், இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட் (இஃப்கோ) உருவாக்கிய நானோ யூரியா திரவம், உரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்கப் புதிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

இஃப்கோவால் உருவாக்கப்பட்ட நானோ யூரியா திரவம், ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் நவீன விவசாய நடைமுறைகளில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது மேம்பட்ட நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்களுக்கு நைட்ரஜனை மிகவும் திறமையாக வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் குறைந்த உரப் பயன்பாட்டுடன் அதிக உற்பத்தித்திறனை அடைய உதவுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு விவசாயத் திறனை மேம்படுத்துவதுடன், நிலையான மற்றும் தன்னிறைவு பெற்ற இந்திய விவசாயத்திற்குப் பங்களிக்கிறது.

IFFCO Nano Urea Liquid A Game-Changer for Modern Agriculture

இஃப்கோவுக்கு தலைவர் திலீப் சங்ஹானி தலைமை பொறுப்பில் உள்ள நிலையில் அவர்கள் நானோ யூரியா திரவத்தின் அறிமுகம் செய்துள்ளனர். இது மேம்பட்ட சாகுபடியையும், உரப் பயன்பாட்டைக் குறைப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது. கிராமப்புற இந்தியா முழுவதும் இதை விரிவுபடுத்துவதற்காக, விவசாயக் கல்வி மற்றும் கள விளக்கங்களின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது இந்தியாவின் நிலையான விவசாய மற்றும் தன்னிறைவு இலக்குகளுக்கு வலு சேர்க்கிறது.

திலீப் சங்ஹானியின் தலைமையில் இஃப்கோ புதுமை, நிலைத்தன்மை மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதை மையமாகக் கொண்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளிப்பதுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மேம்பட்ட விவசாயத் தொழில்நுட்பங்களை சங்ஹானி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்திய விவசாயத்திற்கான ஒரு மாற்றத்தக்கத் தீர்வாக நானோ யூரியா திரவத்தை நிலைநிறுத்துவதில் அவரது தலைமை முக்கிய பங்காற்றியுள்ளது.

அதிகப்படியான ரசாயன உரங்களைச் சார்ந்து இருப்பதைக் குறைத்து, நாடு முழுவதும் சமச்சீர் மற்றும் திறமையான ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகளை சங்ஹானி வலியுறுத்தி வருகிறார். அவரது வழிகாட்டுதலின் கீழ், கிராமப்புற விவசாயிகள் நானோ யூரியா திரவத்தின் நன்மைகளையும் சரியான பயன்பாட்டையும் புரிந்துகொள்ளும் வகையில், இஃப்கோ விவசாயிகளுக்கான விழிப்புணர்வு திட்டங்கள், பெரிய அளவிலான களச் செயல் விளக்கங்கள் மற்றும் டிஜிட்டல் அணுகல் முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது.

நானோ யூரியா போன்ற கண்டுபிடிப்புகள் இந்தியாவின் விவசாயத் தன்னிறைவை நோக்கி நகர்த்துவதுடன், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளையும் எவ்வாறு வலுப்படுத்த உதவும் என்பதையும் திலீப் சங்ஹானி எடுத்துரைத்துள்ளார்.

உரத் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகர முன்னேற்றம்

பல ஆண்டுகளாக, இந்திய விவசாயத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் உரங்களில் யூரியா முதன்மையானதாக உள்ளது. இருப்பினும், வயல்களில் இடப்படும் பாரம்பரிய யூரியாவின் பெரும்பகுதி ஆவியாதல், வடிதல் மற்றும் கழுவுதல் மூலம் பெரும்பாலும் இழக்கப்படுகிறது. இது விவசாயச் செலவுகளை அதிகரிப்பதுடன், மண் சீர்ணமடைதல், நீர் மாசுபாடு மற்றும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்திற்கும் பங்களிக்கிறது.

நானோ யூரியா திரவம் இந்தச் சவால்களை நானோ அளவிலான ஊட்டச்சத்துத் துகள்கள் மூலம் எதிர்கொள்கிறது. இது ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது. திரவ வடிவம் பயிர்கள் இலை மேற்பரப்புகள் வழியாக நைட்ரஜனை மிகவும் திறம்பட உறிஞ்ச அனுமதிக்கிறது. இது ஊட்டச்சத்து விநியோகத்திற்கும், கழிவுகளைக் கணிசமாகக் குறைப்பதற்கும் வழிவகுக்கிறது.

ஒரு சிறிய நானோ யூரியா திரவப் பாட்டில், ஒரு பாரம்பரிய யூரியா மூடைக்கான தேவையைக் குறைக்கிறது. இதனால் போக்குவரத்து, சேமிப்பு மற்றும் கையாளுதல் செலவுகள் கணிசமாகக் குறைகின்றன.

நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல்

நானோ யூரியா திரவத்தின் மிக பெரிய நன்மைகளில் ஒன்று, சுற்றுச்சூழல் பொறுப்புள்ள மற்றும் நிலையான விவசாயத்திற்கு அது அளிக்கும் பங்களிப்புதான். ரசாயன உரங்களின் அதீத பயன்பாடு மண் வளம் குறைதல், நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையின்மை பற்றிய கவலைகளை நீண்டகாலமாக எழுப்பியுள்ளது.

ஆனால், இந்த நானோ யூரியா திரவம் நிலத்தடி நீர் மாசுபாட்டைக் குறைக்கிறது, உர உற்பத்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கிறது, மேலும் மேம்பட்ட மண் ஆரோக்கிய மேலாண்மையை ஆதரிக்கிறது.

சமச்சீர் உரப் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், இது ஒரு நிலையான விவசாயச் சூழல் அமைப்பை உருவாக்க உதவுகிறது. இது இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை இலக்குகளுடன் நெருக்கமாக இணைகிறது. அத்துடன் தூய்மையான மற்றும் திறமையான விவசாய முறைகளை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது.

விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல்

நானோ யூரியா திரவத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்குச் சொல்லித் தர இஃப்கோ விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள், பயிற்சித் திட்டங்கள், கள அளவிலான செயல்விளக்கங்கள் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலம் இந்த அமைப்பு விவசாயச் சமூகங்களிடையே வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

நானோ யூரியா திரவத்தைப் பயன்படுத்தும் பல விவசாயிகள் மேம்பட்ட பயிர் தரம், ஊட்டச்சத்து பயன்பாட்டில் திறன் அதிகரிப்பு மற்றும் உரச் செலவுகள் குறைப்பு எனப் பல நன்மைகள் அடைவதாகத் தெரிவித்துள்ளனர். அதன் எளிதான சேமிப்பு மற்றும் போக்குவரத்து தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்குக் குறிப்பாகப் பயனுள்ளதாக அமைகிறது. நானோ யூரியா திரவத்தின் மலிவுத்தன்மை மற்றும் நடைமுறைப் பயன்பாடு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பெரியளவில் உதவுகிறது.

ஆத்மநிர்பார் பாரத்

இந்தியா வரலாற்று ரீதியாக அதன் உரத் தேவைகளில் கணிசமான பங்கிற்கு இறக்குமதியைச் சார்ந்துள்ளது. நானோ யூரியா திரவம் போன்ற கண்டுபிடிப்புகள் இந்த சார்புநிலையைக் குறைப்பதோடு, உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் திறன்களை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

திலீப் சங்ஹானியின் தலைமையின் கீழ், இந்தியாவுக்கான ஒரு வலிமையான மற்றும் தன்னிறைவு பெற்ற உரச் சூழல் அமைப்பை உருவாக்குவதில் இஃப்கோ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நானோ யூரியாவின் வளர்ந்து வரும் பயன்பாடு, விவசாயக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் பன்மடங்கு வலிமையைப் பிரதிபலிக்கிறது. இது ஆத்மநிர்பார் பாரத் (தன்னிறைவு இந்தியா) தொலைநோக்குப் பார்வையுடன் நெருக்கமாக இணைகிறது.

அறிவியல் முன்னேற்றத்தை விவசாயிகளை மையமாகக் கொண்ட வளர்ச்சியுடன் இணைப்பதன் மூலம், இந்தியா ஒரு வலிமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்க இஃப்கோ உதவுகிறது.

ஸ்மார்ட் விவசாயத்தின் எதிர்காலம்

காலநிலை மாற்றம், வளப் பற்றாக்குறை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்களை விவசாயம் எதிர்கொள்வதால், திறமையான ஊட்டச்சத்து மேலாண்மை இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. உலகளவில் நிலையான விவசாயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நானோ உரங்கள் ஒரு முக்கியமான பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஃப்கோ நானோ யூரியா திரவம் என்பது தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு விவசாய உற்பத்தியை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதற்கும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை இது எப்படி ஆதரிக்கிறது என்பதற்கும் ஒரு முன்னோடி நிற்கிறது.

விவசாயிகளிடையே நானோ யூரியா திரவத்தின் வளர்ந்து வரும் பயன்பாடு, புத்திசாலித்தனமான, தூய்மையான மற்றும் திறமையான விவசாய நடைமுறைகளை நோக்கிய ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. இது வரும் ஆண்டுகளில், ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளை மறுவடிவத்து, இந்தியாவுக்கு ஒரு பசுமையான, நிலையான மற்றும் தன்னிறைவு பெற்ற விவசாய எதிர்காலத்தை உருவாக்குவதற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+