மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த 'சிமி' தீவிரவாதிகள் சதி
பாட்னா: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த சிமி தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி பேசிய மைதானம், பாட்னா ரயில் நிலையம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 6 பேர் பலியாகினர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேசிய புலனாய்வு படையினர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரை சேர்ந்த உமர்சித்திக் மற்றும் அப்துல் வாஹித் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், சிமி அமைப்பை சேர்ந்த மனித வெடிகுண்டுகள் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற மோடி பேசும் பொதுக்கூட்ட மேடைகளின் அருகில் நின்று அவரது ஒவ்வொரு அசைவையும் மனித வெடிகுண்டுகள் தீவிரமாக கண்காணித்து மோடியை கொல்ல தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளனர்.
மோடியை கொல்ல முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications