தமிழ்நாடு முதல்வர் கர்நாடக முதல்வரை சந்தித்தாலும் காவிரியில் தண்ணீர் கிடையாது.. கைவிரித்த கர்நாடகா!
பெங்களூர்: தமிழகத்திற்கு விவசாய பயன்பாட்டிற்காக காவிரி நீரை திறந்துவிடுவது என்பது இயலாத காரியம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த எம்.பி.பாட்டீல் கூறியதாவது:
கர்நாடக அணைகளில், தற்போதுள்ள தண்ணீர் பெங்களூரு மற்றும் காவிரி நீர்பாசன மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே போதிய அளவாக உள்ளது.
கர்நாடக முதல்வரை, தமிழக முதல்வர் சந்தித்தாலும், எங்களது நிலைமையை விளக்குவோம், இவ்வோறு அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடக அமைச்சர் பேட்டி, தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications