டெல்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட 500 குடிசைகளை இடித்துத் தள்ளிய போலீஸ்... குழந்தை பலி
டெல்லி: மேற்கு டெல்லியில் ரயில்வே நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடிசைகளை போலீசார் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தள்ளினர். இதில் ஒரு குழந்தை பலியானதாகக் கூறப்படுகிறது.
மேற்கு டெல்லியிலுள்ள ஷக்கூர் பஸ்தி எனும் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த பகுதி ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. அங்கு புதிதாக ரயில் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதியில் வசித்து வந்தவர்களை காலி செய்யுமாறுரயில்வே நிர்வாகம் பலமுறை நோட்டிஸ் அளித்துள்ளது.

இருப்பினும் , அந்த பகுதி மக்கள் குடிசைகளை காலி செய்ய மறுப்புத் தெரிவித்ததனால், நேற்று இரவு ரயில்வே போலீசார்அதிகாரிகளின் முன்னிலையில் குடிசைகளை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடித்துத் தள்ளினர். இதில் ஒரு குழந்தை பலியானதாகக் கூறப்படுகிறது.
ரயில்வே அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குடிசைகளை இடித்துத் தள்ளியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications