இந்தியாவின் "செவ்வாய் கிரகப் பிரவேசத்திற்கு" இன்னும் 2 நாட்களே.... பரவசத்தில் இந்தியர்கள்!
பெங்களூர்: உலகமே இந்தியா மீது தனது கவனத்தை முழுமையாக திருப்பியுள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரக ஆய்வு விண்கலம், இன்னும் 2 நாட்களில் அதாவது செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் பிரவேசிக்கவுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய சாதனையாகும். அதை விட முக்கியமாக, சீனாவை இந்த விஷயத்தில் இந்தியா தோற்கடிக்கப் போகிறது என்பதுதான்.
எப்படி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தரை மார்க்கத்தில் கடும் போட்டி நிலவுகிறதோ அதேபோல விண்வெளிக்கு அப்பாலும் இரு நாடுகளும் கடுமையான போரில் ஈடுபட்டுக் கொண்டுள்ளன. அதில் தற்போது செவ்வாய் கிரக பயணத்தில் சீனாவை தோற்கடிக்கிறது இந்தியா.

முதல் ஆளாக நுழையும் இந்தியா
சீனாவை முந்திக் கொண்டு இந்தியா முதல் ஆளாக தனது செவ்வாய் கிரக பயணத்தை வெற்றிகரமாக்கப் போகிறது என்பதுதான் இதன் முக்கிய அம்சமாகும்.

ஆசிய சாதனை
இந்தியாவின் மங்கள்யான், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையை வெற்றிகரமாக அடைந்து விட்டால் அது மிகப் பெரிய ஆசி சாதனையாகவும் மாறும்.

முதல் ஆசிய நாடு
அதாவது செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய முதல் ஆசிய நாடாக இந்தியா உருவெடுக்கும்.

தோற்றுப் போன சீனா, ரஷ்யா, ஜப்பான்
இதற்கு முன்பு 2011ம் ஆண்டு சீனா தனது யிங்குயோ 1 என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல ரஷ்யாவும் 1998ம் ஆண்டே போபோஸ் கிரன்ட் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதுவும் தோல்வியில் முடிந்தது. அதபோல ஜப்பான் அனுப்பிய விண்கலம் எரிபொருள் தீர்ந்து போனதால் தோல்வியில் முடிந்தது.

சாதனை மங்கள்யான்
இந்தியா தனது மங்கள்யான் விண்கலத்தை வெறும் 15 மாதங்களில், மிகக் குறைந்த பொருட் செலவல் உருவாக்கியது என்பதுதான் விசேஷமே. வேறு எந்த நாடும் தனது செவ்வாய் திட்டத்துக்காக இவ்வளவு குறைந்த செலவை செய்ததில்லை. எனவே அந்த வகையிலும் மங்கள்யான் ஏற்கனவே சாதனை படைத்து விட்டது.

முதல் முயற்சியிலேயே வென்ற முதல் நாடு
மேலும் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் தனது விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய முதல் நாடாகவும் இந்தியா உருவெடுக்கும் என்பது இன்னொரு பெருமிதமாகும்.
-
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications