மேற்கு வங்கத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பள்ளியிலிருந்து நீக்கிய நிர்வாகம்
பிஷாம்பூர்: மேற்கு வங்க மாநிலம் பிஷாம்பூரில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை தலைமை ஆசிரியர் பள்ளியிலிருந்து நீக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகு வங்க மாநிலம் பிஷாம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தெற்கு பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் படித்து வந்தான். அவனது தந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வரை அவர் அந்த பகுதியில் எழுது பொருள் அங்காடி நடத்தி வந்தார்.
இந்நிலையில், அவருக்கு உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரிடமிருந்து அவருடைய மனைவிக்கும் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவருடைய கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதைக் குறைத்தனர். இதனால் அவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த கடையை மூடிவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வேலைக்குச் சென்றார்.
இதனையடுத்து, தங்களது 7 வயது மகனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக, பள்ளிக்கு அவ்வப்போது விடுப்பு எடுத்துள்ளான். இதுகுறித்து தலைமை ஆசிரியர் சிறுவனின் பெற்றோர்களை அழைத்து காரணம் கேட்ட போது, அவன் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த மாணவனை இனி பள்ளிக்கு வரவேண்டாம் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். மேலும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அந்த சிறுவனின் பாட்டியை அழைத்து, அவரையும் எயிட்ஸ் நோயை உறுதிப்படுத்துவதற்கான சோதனையை செய்யுமாறு தலைமையாசிரியர் சொல்லியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலைமையாசிரியாரை அழைத்து விளக்கம் கேட்ட போது, பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வந்ததால், அந்த பையனை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு அனுமதித்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் கூரியதனாலேயே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். ஆனால், அந்த மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரை எச்சரிக்கை செய்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவிட்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications