டெல்லியில் 'ரா' அதிகாரி மற்றும் குடும்பத்தினர் மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ரா உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரா உளவுத்துறை அதிகாரியான அனன்யா சக்ரவர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அனன்யா சக்ரவர்த்தி என்ற அந்த அதிகாரி, ரா அமைப்பில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். டெல்லி சதீக் நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்கப்பட்டது.
அதேபோல் அவரது குடும்பத்தினரும் மர்மமாக இறந்து கிடந்தனர். அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் உடலில் காயங்கள் இருப்பதால் மர்மம் நீடிக்கிறது. இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications