Today's Chanakya Exit polls: சத்தீஸ்கரில் பாஜகவுக்கு கண்ணிவெடி! கை சின்ன பொத்தானை அழுத்திய மக்கள்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 57 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும் என டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போலில் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சில தொகுதிகளில் நக்ஸலைட் ஆதிக்கம் உள்ளன. இதனால்தான் இங்கு 90 தொகுதிகளே இருந்தாலும் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த இரு தேர்தல்களிலும் மொத்தம் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் பாஜக காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
மொத்தம் 90 தொகுதிகளில் 15 தொகுதிகளில் நட்சத்திர போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் முக்கிய பிரச்சினைகளாக ஊழல், விவசாயிகளின் பிரச்சினை, பழங்குடியினர் பிரச்சினை , நக்ஸலைட்டுகள் பிரச்சினை ஆகியவை ஆகும்.
இங்கு முதல் கட்ட தேர்தலின் போதே சுக்மா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி டுடேஸ் சாணக்யா கணிப்பின்படி பாஜக 33 இடங்களிலும், காங்கிரஸ் 57 இடங்களிலும் வெல்லும். அதாவது இந்த முறை காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும். முட்டி மோதிய பாஜகவுக்கு தோல்வியே விஞ்சும். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இது ஒவ்வொரு கட்சிக்கான செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் உள்ளன.












Click it and Unblock the Notifications