கேரளாவின் எழிமலா பயிற்சி தளத்தில் 380 கடற்படை வீரர்கள் பயிற்சி முடிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நான்கு வருட கடுமையான பயிற்சிகளுக்கு பிறகு கடற்படையின் 380 வீரர்கள் இன்று பயிற்சியை முடித்து வெளிச்செல்கின்றனர்.

கேரளாவின், கன்னூர் மாவட்டத்திலுள்ள எழிமலா பகுதியில் இந்திய கடற்படையின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இங்கு ஆறு மாதங்கள் முதல் நான்காண்டுகள் வரையில் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும்.

INA decked up for Autumn Term PoP

கடல்சார் பயிற்சிகள், நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு வகை பயிற்சிகள் அளிக்கப்படும். இங்கு கடல்சார் பாடங்களில் பிடெக் உள்ளிட்ட படிப்புகளும் கற்றுத்தரப்படும். பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்ச்சியில் துணை அட்மிரல் அஜித் குமார், கமாண்டர் கே.பி.மேதா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

இங்கு இசிஇ, எம்இ போன்ற படிப்புகளை முடிப்போருக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பட்டம் அளிக்கிறது. இன்றைய விழாவில் மொத்தம் 380 பேர் பயிற்சி முடிந்து செல்ல உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+