கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி சன்மானம்.. வருமானத்துறை அதிரடி அறிவிப்பு
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வரி ஏய்ப்பை தடுக்கவும், வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசும் வருமான வரித்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தொடர்பாக வருமான வரித்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. அதாவது வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தொடர்பாக தகவல் தருவோருக்கான சன்மானத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
|
வெகுமதி திட்டம்
இதுதொடர்பாக வருவமான வரித்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்துள்ளது. அதாவது பினாமி பரிவர்த்தனைகள் Informants Reward Scheme, 2018" என்று தலைப்பிடப்பட்ட ஒரு புதிய வெகுமதி திட்டத்தை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரித் துறையின் முயற்சிகளில் மக்கள் பங்கு பெறுவதை அதிகரிக்கவும் வரி ஏய்ப்பை குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
மக்களை ஊக்குவிக்க
இந்த வெகுமதித் திட்டம், மறைமுக முதலீட்டாளர்கள் மற்றும் அத்தகைய சொத்துக்களில் பெறப்பட்ட வருமானம், அதே போல் பினாமி பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துக்களை பற்றிய தகவல்களை வழங்க மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
|
ரூ. 50 லட்சம் சன்மானம்
இத்திட்டத்தின் கீழ், ஒரு நபர் குறிப்பிட்ட முறையில் தகவலை வழங்கினால் 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும். வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தந்தால் ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.
|
ரகசியமாக வைக்கப்படும்
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற வெளிநாட்டினரும் தகுதியுடையவர்கள் ஆவர். வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி வரை சன்மானம் தரப்படும்.தகவல் தருவோரின் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications