ஐ.நா. சீர்திருத்தங்களுக்காக இந்தியா, ஆப்பிரிக்கா இணைந்து குரல் எழுப்ப வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா- ஆப்பிரிக்கா நாடுகள் இடையேயான 3வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியதாவது:
இந்தியாவும், ஆப்பிரிக்காவும் மிகவும் பழமை வாய்ந்த நாகரிகங்களைக் கொண்டவை. இந்தியாவும், ஆப்பிரிக்காவும் இளைஞர்கள் நிறைந்த நாடுகள்... மூன்றில் இரு பங்கினர் 35 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள்.

கலாச்சாரம், வணிக ரீதியாக இந்தியா- ஆப்பிரிக்கா இடையே 100-ஆண்டுகளுக்கும் மேலாக உறவு நீடிக்கிறது. உலகின் மிகச்சிறப்பு மிக்க இடமாக டெல்லி தற்போது மாறிஉள்ளது.
பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆப்பிரிக்கா முன்னேறி வருகிறது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஒரே குடையின் கீழ் உள்ளனர்.
உலகில் வாய்ப்புகள் வாய்ந்த இடமாக இந்தியாவும், ஆப்பிரிக்காவும் திகழ்கின்றது. இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றை ஒன்று வளமாக்கி வருகின்றன.
ஆப்பிரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்.
இந்திய சந்தைகளில் 34 ஆப்பிரிக்க நாடுகள் வரிச்சலுகைகளை அனுபவித்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகள் பெண்களை மதிக்கின்றன. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆப்பிரிக்க நாடுகளை இந்தியா பாராட்டுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் நாடாளுமன்றங்களில் பெண்கள் அதிகளவில் உள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மறு சீரமைப்பு செய்வது தொடர்பான விவகாரத்தில் இந்தியாவும், ஆப்பிர்க்க நாடுகளும் ஒரே கருத்துடன் உள்ளன.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் இதற்காக இணைந்து குரல் எழுப்ப வேண்டாம். இந்தியர்களின் இதயமும், ஆப்பிரிக்கர்களின் இதயமும் ஒரே மாதிரி துடிக்கிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications