ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் தடை... 'வேட்டை' சூடு பிடிக்கும்?
டெல்லி: இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனுடன் தொடர்புடைய தீவிரவாதிகளை, ஆதரவாளர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரமாகும் எனத் தெரிகிறது.
ஈராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற ஒரு நாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர். பிற நாடுகளையும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் இலக்கு வைப்பதைத் தடுக்க அமெரிக்காவும் அதன் நேசநாட்டு படைகளும் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் தலையை வெட்டி எடுத்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இந்த தீவிரவாதிகள் வசம் ஏற்கெனவே 39 இந்தியர்களும் பிணைக் கைதிகளாக இருக்கின்றனர். இவர்கள் குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லாத நிலையே நீடிக்கிறது.
உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 3 வது இடம் என்ற போதும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் மொத்தமே 4 இந்தியர்கள்தான் சேர்ந்தனர். அவர்களில் ஒரு இளைஞர் நாடு திரும்பிவிட்டார்.
இந்நிலையில்தான் பெங்களூர் நகரில் இருந்து மேதி பிஸ்வாஸ் இயக்கிய ட்விட்டர் கணக்கு மூலமே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக திடுக்கிடும் தகவலை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மேதி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டார்.
தற்போது மேதி பிஸ்வாஸின் கூட்டாளிகளையும் போலீசாரும் தேசிய புலனாய்வு அமைப்பினரும் கைது செய்துள்ளனர். மேலும் பலரும் தேடப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே நாடாளுமன்றத்தில் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுவிட்டது என்றார்.
தற்போது தடை செய்யப்பட்ட இயக்கமாக அது இடம்பெற்றிருப்பதால் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை தீவிரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த தடையால் ஆத்திரமடைந்து தங்களது வசம் உள்ள 39 இந்தியர்கள் உயிருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் ஆபத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications