சைட் எபக்ட்டை ஏற்படுத்தும் பென்சிடில், கோரக்ஸ் உள்ளிட்ட 300 மருந்துகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் ஒப்புதல் பெறாத 300க்கும் மேற்பட்ட பக்கவிளைவுகளை உண்டாக்கும் மருந்துகள் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான நோய்களுக்கு ஒரே நிவாரணம் அளிக்கும் வகையில், பென்சிடில் என்ற மருந்தை அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ளது.

இது உண்மையில் இருமல் மருந்தாகும். இதில் கோடைன் என்ற மருந்துப் பொருளும் இடம் பெறுகிறது.

எல்லா வலிகளுக்கும் நிவாரணம்:

எல்லா வலிகளுக்கும் நிவாரணம்:

இந்த மருந்து இருமல், சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, உடல் வலி என பல்வேறு வகையான நோய்களுக்கு ஒரே நிவாரணியாக செயல்படுகிறது. இதனால் இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது.

அதிரடியாக தடை:

அதிரடியாக தடை:

இதையடுத்து ஒரே மருந்தில் பல்வேறு வகையான நோய்களுக்காக அளிக்கப்படும் பென்சிடில், கோரக்ஸ் போன்ற 300க்கும் மேற்பட்ட கூட்டு கலவை மருந்து விற்பனைக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்துள்ளது.

மறு ஆய்வு செய்ய உத்தரவு:

மறு ஆய்வு செய்ய உத்தரவு:

கடந்த 2014 ஆம் ஆண்டு மாநில அரசுகளின் அனுமதியுடன் இந்திய சந்தைக்குள் நுழைந்த 6,000 கூட்டு கலவை மருந்துகளை மறு ஆய்வு செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

விரைவில் லிஸ்ட்:

விரைவில் லிஸ்ட்:

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில மருந்துகள் தடை செய்யக்கூடியவை என தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் அந்த மருந்துகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் அதற்கான உத்தரவு வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+