தெற்கு சூடானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தெற்கு சூடானில் ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் மிக தீவிரமடைந்துள்ளது. போரின் காரணமாக, பாதுகாப்பு முகாம்களில் 45,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் ஜூமாவிலும், போர் மற்றும் பெண்டியு ஆகிய நகரங்களிலும் இந்த முகாம்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால், அங்கு தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் உறுதிபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "ஏற்கனவே பெரும்பாலான மக்கள், விமானங்கள் மூலமும், தரை வழிப் போக்குவரத்தின் மூலமாகவும் நாடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் "என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+