இந்திய சிறைகளில் இருந்து 37 பாகிஸ்தானியர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய சிறைகளில் இருந்து 37 பாகிஸ்தானியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற உடன் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தது பாகிஸ்தான்.
இதைத் தொடர்ந்து இலங்கையும் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக மீனவர்களை விடுதலை செய்தது. இந்தியாவும் இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய முன்வந்தது.
இந்நிலையில் இந்திய சிறைகளில் இருக்கும் பாகிஸ்தான் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் வாகா எல்லையில் பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications