இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்...அதிகாரப் பரவலாக்கத்தை காங். ஏற்கிறது:"திராவிட" குரலில் ராகுல் காந்தி
ஐஸ்வால்: இந்தியா ஒரு நாடு அல்ல.. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்; அதிகாரப்பரவலாக்கத்தையே காங்கிரஸ் விரும்புகிறது; பாஜகவோ அதிகாரத்தை டெல்லியில் குவிக்க நினைக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: மாநிலங்களின் ஒன்றியம்: இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து மதங்களும், கலாச்சாரங்களும், வரலாறுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். நமது நாட்டின் அடித்தளத்தை அமைக்க காங்கிரஸ் உதவியது, அந்த அடித்தளத்தை பாதுகாத்து சாதனை படைத்துள்ளோம். நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. அதிகாரப் பரவலாக்கம் மற்றும் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே காங்கிரஸின் தொலைநோக்கு பார்வை ஆனால் பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தமோ, டெல்லியில் அதிகாரத்தை மையப்படுத்தி அனைத்து முடிவுகளையும் மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்பதாகும்.

5 மாநில தேர்தல்: நாங்கள் இந்தியாவின் மதிப்புகளைப் பாதுகாப்போம். இந்திய அரசியலமைப்பை பாதுகாப்போம். இந்தியா என்ற எண்ணத்தை பாதுகாப்போம். தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறப் போகிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்காக பாடுபடுகிறது. ராஜஸ்தான் சிறந்த சுகாதாரக் கொள்கையைக் கொண்டுள்ளது.
கர்நாடகா ஒப்பிடமுடியாத சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. அதே சமயம் சத்தீஸ்கர் வலுவான கொள்கைகளுடன் தொழில் முனைவோரை ஆதரிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஊழல் நிறைந்த பாஜக அரசை அகற்றுவோம். தெலுங்கானாவில் மகத்தான வெற்றியை எங்கள் 6 தேர்தல் வாக்குறுதிகள் உறுதி செய்யும்.
மணிப்பூர் ஏன் போகலை?: இந்திய பிரதமர் ஏன் இன்று வரை மணிப்பூர் செல்லவில்லை என்று? எனக்கு இன்னமும் புரியவில்லை... என்னால் பதில் சொல்ல முடியாத புதிராக உள்ளது. அவர் நம் நாட்டின் பிரதமர். ஒரு மாநிலம் 4 மாதங்களுக்கும் மேலாக எரிகிறது. அதன் மீது அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று
அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு என்பதை பிரதமர் உணராமல் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications