எபோலா பீதி: விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு
டெல்லி: எபோலா வைரஸ் பரவுவதை எப்படி தடுப்பது என்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு உத்தரவிட்டுள்ளது.
எபோலா வைரஸ் பரவி வரும் வேளையில் அதை தடுப்பது குறித்த தகவல்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அளித்துள்ளது. சர்வதேச சேவையில் ஈடுபடும் அனைத்து விமான நிறுவனங்களும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
பயணிகள் யாருக்காவது எபோலா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் அது குறித்து தெரிவிக்க வேண்டும்
பயணிகள் கடந்த 21 நாட்களில் எபோலா வைரஸ் தாக்கிய நாடுகளுக்கு சென்று வந்திருந்தால் அது குறித்த தகவல்களை சமர்பிக்க வேண்டும். மேலும் அந்த நாட்டில் இருந்து திரும்பிய பிறகு எபோலா அறிகுறி இருந்ததா என்பதை தெரிவிக்க வேண்டும்
எபோலா வைரஸ் பரவியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றிருந்தாலோ அல்லது அங்கு தங்கியிருந்துவிட்டு வந்தாலோ அந்த பயணிகளின் விவரங்களை விமான நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும்.
எபோலா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வந்தால் அவர் விமான நிலையத்தை அடையும் முன்பு அது குறித்த தகவலை இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் எபோலா தாக்குதல் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் இருந்து டெல்லி வந்த பயணி ஒருவருக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு எபோலா காய்ச்சல் இல்லை என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தான் விமான போக்குவரத்து இயக்குனரகம் விமான நிறுவனங்களுக்கு மேற்கூறிய உத்தரவை விடுத்துள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications