கை வெட்டப்பட்ட தமிழக பெண்: சவுதியின் விளக்கத்தை ஏற்க மறுத்தது இந்தியா
டெல்லி: 55 வயது இந்திய பெண் தனது முதலாளியின் வீட்டில் இருந்து தப்பிக்கையில் கீழே விழுந்ததில் கையை இழந்துவிட்டார் என்று சவுதி கூறுவதை ஏற்க இந்தியா தயாராக இல்லை.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மூங்கிலேறி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி(55) சவுதி அரேபியாவில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அவரின் வலது கையை அவரது முதலாளி வெட்டியுள்ளார். இதனால் அவர் ரியாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது கையை முதலாளி வெட்டவில்லை என்றும், அவர் முதலாளியின் வீட்டில் இருந்து தப்பிக்கையில் கீழே விழுந்து கையை இழந்துவிட்டதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியின் இந்த விளக்கத்தை ஏற்க இந்தியா தயாராக இல்லை.
இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு சவுதி அரேபியாவை இந்தியா கேட்டுள்ளது. கஸ்தூரியின் கை வெட்டப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் முதலாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும் கஸ்தூரியின் மருத்துவ செலவை அவரது முதலாளியே ஏற்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்த அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரியின் மனநலம் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று சவுதி கெசட் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. கஸ்தூரி சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு சவுதி வந்ததாகவும், முதலாளியின் வீட்டில் இருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்தது கை துண்டாகிவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. பெரும்பாலான ஏஜெண்டுகள் உண்மையை மறைத்து இந்தியர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications