கை வெட்டப்பட்ட தமிழக பெண்: சவுதியின் விளக்கத்தை ஏற்க மறுத்தது இந்தியா
டெல்லி: 55 வயது இந்திய பெண் தனது முதலாளியின் வீட்டில் இருந்து தப்பிக்கையில் கீழே விழுந்ததில் கையை இழந்துவிட்டார் என்று சவுதி கூறுவதை ஏற்க இந்தியா தயாராக இல்லை.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மூங்கிலேறி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி(55) சவுதி அரேபியாவில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அவரின் வலது கையை அவரது முதலாளி வெட்டியுள்ளார். இதனால் அவர் ரியாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது கையை முதலாளி வெட்டவில்லை என்றும், அவர் முதலாளியின் வீட்டில் இருந்து தப்பிக்கையில் கீழே விழுந்து கையை இழந்துவிட்டதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியின் இந்த விளக்கத்தை ஏற்க இந்தியா தயாராக இல்லை.
இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு சவுதி அரேபியாவை இந்தியா கேட்டுள்ளது. கஸ்தூரியின் கை வெட்டப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் முதலாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும் கஸ்தூரியின் மருத்துவ செலவை அவரது முதலாளியே ஏற்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்த அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரியின் மனநலம் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று சவுதி கெசட் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. கஸ்தூரி சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு சவுதி வந்ததாகவும், முதலாளியின் வீட்டில் இருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்தது கை துண்டாகிவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. பெரும்பாலான ஏஜெண்டுகள் உண்மையை மறைத்து இந்தியர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications