இந்தியாவுக்கு 'பாரத்' என பெயரிடக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலர் நிரஞ்சன் பாத்வால் உச்ச நீதிமன்றதில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்தியாவுக்கு பாரத், ஹிந்துஸ்தான், ஹிந்த் பாரத்பூமி அல்லது பாரத்வர்ஷ் என்ற வகையில் பெயரிட வேண்டும் என்பது அரசியல் நிர்ணைய சபையின் முதன்மையான பரிந்துரையாக இருந்தது.

எனவே மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இந்தியா என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று கோரியிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள் யூனியன் பிரேதேசங்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications