எல்லையில் ராணுவத்தை குவிக்கும் இந்தியா-பாகிஸ்தான்.. தொடர்கிறது போர் பதற்றம்
ஸ்ரீநகர்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்களை பறக்கவிட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், "இந்திய எல்லை பிராந்தியத்தில் சியாச்சென் அல்லது பிற இடங்களில் பாக்கிஸ்தான் விமானம் எந்த வான்வெளி மீறலிலும் ஈடுபடவில்லை," என்று ஒரு இந்திய விமானப்படை அதிகாரி நேற்று தெரிவித்தார்.

இந்திய துருப்புக்கள், சியாச்சோ ரிட்ஜ் பிராந்தியத்தில் 16,000 முதல் 22,000 அடி வரை, கட்டுக்குள் வைத்துள்ளன. "பாகிஸ்தான் ராணுவம்-ஐ.எஸ்.ஐ. ஒருங்கிணைந்த ஆதரவுடன் பனி மலை பகுதிகளில் ஊடுருவல் முயற்சிகள் செய்கின்றன. இதனால் பனி உருகுவது அதிகரித்து வருகின்றன" என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
நேற்று, சகர்டு விமானப்படை தளத்திற்கு வருகை தந்த, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி சோஹைல் அமன் இவ்வாறு குறிப்பிட்டார்: "பாகிஸ்தான் தேசத்தின் எதிரிகளின் (இந்தியா) அறிக்கையைப் பற்றி கவலைப்படக்கூடாது ... நாங்கள் சமாதானத்தை விரும்பும் மக்கள், ஆனால் அச்சுறுத்தல் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எல்லா விதமான சவால்களும், எந்த ஆக்கிரமிப்பிற்கும் பதிலடி தருவோம். அதை அவர்கள் வருங்கால தலைமுறை கூட மறக்காது" என மிரட்டும் தொனியில் பேசினார்.
செவ்வாயன்று இந்திய ராணுவம் முதன் முறையாக, மே மாதம் 9-ம் தேதி நஷ்ஷே நிலைகளில் பாக்கிஸ்தான் ராணுவ ஊடுருவலை முறியடித்த வீடியோவை வெளியிட்டது. இதன்பிறகு சுமார் ஐந்து மணி நேரம் கழித்து, பாகிஸ்தான் ராணுவமும் மே மாதம் 13 ஆம் தேதி இந்திய ராணுவ நிலைகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோவை வெளியிட்டது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications