இந்தியாவின் அதிவேக ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸை கொடியசைத்து துவக்கி வைத்த சுரேஷ் பிரபு
டெல்லி: இந்தியாவின் அதிவேக ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸ் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கொடி அசைத்து இன்று துவக்கி வைத்தார்.
இந்தியாவின் அதிவேக ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸ் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கொடி அசைத்து இன்று துவக்கி வைத்தார். டெல்லி, ஆக்ரா இடையேயான இந்த ரயில் 192 கிலோமீட்டர் தூரத்தை 100 நிமிடங்களில் சென்றடையும்.
.@RailMinIndia @sureshpprabhu flags off India’s 1st Semi-High Speed Train 'Gatiman Express'#AIRpics: Dipendra Kr pic.twitter.com/7MA668WIO7
— All India Radio News (@airnewsalerts) April 5, 2016
முன்னதாக டெல்லி, ஆக்ரா இடையேயான தூரத்தை 118 நிமிடங்களில் கடக்கும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் தான் அதிவேக ரயிலாக இருந்தது. கதிமான் எக்ஸ்பிரஸ் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
விமானத்தில் சிப்பந்திகள் இருப்பது போன்று கதிமான் எக்ஸ்பிரஸிலும் சிப்பந்தி பெண்கள் பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்று அவரவர் இருக்கையில் அமர உதவி செய்வார்கள்.
Gatiman Running at 160 Kmph pic.twitter.com/QpOvfVzHjT
— GM NorthCentral Rail (@GMNCR1) April 5, 2016
செமி புல்லட் ரயிலான இது டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுத்தீன் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி ஆக்ரா கன்டோன்மென்ட் நிலையத்தை சென்றடையும். வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும்.
நிஜாமுத்தீன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு கிளம்பும் கதிமான் எக்ஸ்பிரஸ் காலை 9.50 மணிக்கு ஆக்ராவை சென்றடையும்.












Click it and Unblock the Notifications