காதில் வளையம்.. தலையில் துண்டு.. கையில் கம்பு.. தோற்று போனார் இந்தியாவின் முதல் மாட்டு அமைச்சர்!
இந்தியாவின் முதல் மாட்டு மந்திரி சுயேச்சையிடம் தோல்வி அடைந்தார்.
Recommended Video

ஜெய்ப்பூர்: காதில் வளையம்.. தலையில் ரெட் கலர் துண்டு.. கையில் ஒரு கம்பு... என வலம் வந்த இந்தியாவின் முதல் மாட்டு அமைச்சர் பரிதாப தோல்வியை தழுவினார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக மாடுகள் நலத்துறைக்கு என்று தனியாக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒட்டாராம் தேவசிதான்.
இவர் ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் பாஜக அமைச்சர் ஆவார். சிரோஹி என்ற தொகுதியில் போட்டியிட்டு, சுயேச்சையிடம் தற்போது தோல்வி அடைந்துள்ளார்.

காதில் வளையம்
எப்பவுமே வெள்ளை கலர் வேஷ்டி கட்டியிருப்பார். தலைக்கு சிவப்பு கலர் தலைப்பாகையைதான் அணிவார். அத்துடன் காதில் ஒரு வளையம் மாட்டியிருப்பார். எங்கு சென்றாலும், செல்லவில்லை என்றாலும், கையில் ஒரு கம்பு வைத்திருப்பார். இதுதான் இவரது அடையாளம். அதனால் எப்பவுமே எந்த கூட்டத்திலும் இவர் பளிச்சென தெரிவார்.

ட்ரேட் மார்க்
இந்த டிரஸ் அவருக்கு ஒரு ட்ரேட் மார்க். இந்த கோலத்திலேயே அமைச்சரவை, சட்டமன்ற கூட்டங்களிலும் கூட கலந்து கொள்வார். இவர்தான் இப்போது ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் தோற்று போய் உள்ளார்.

படுதோல்வி
சுயேச்சை வேட்பாளர் சன்யாம் லோதா என்பவரிடம் 10,253 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்திருக்கிறார் ஒட்டாராம் தேவசி. இந்த சுயேச்சை வேட்பாளர் தொகுதி மக்களுக்கு ஒன்றும் புதிதில்லை.. இவர் ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர்தான் என்பதால் அவரது வெற்றி ரொம்ப எளிதாகிவிட்டது.

மாட்டு அமைச்சர்
ஒரு காலத்தில் போலீஸ்காரராக இருந்தவர் ஒட்டாராம் தேவசி. பின்னர் உடல் நிலை காரணமாக வேலையை விட்டு விட்டார். பிறகு அரசியலில் இணைந்தார். அமைச்சராகவும் உயர்ந்தார். இந்தியாவின் முதல் மாட்டு அமைச்சர் என்ற பெயரைப் பெற்றவர் கடைசியில் சுயேச்சையிடம் தோல்வி அடைந்திருப்பது சோகம்தான்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications