மாயமான ஏ.என் 32 விமானத்தை தேடுவதற்கு அமெரிக்காவின் உதவியை நாடுகிறது இந்தியா
டெல்லி: மாயமான ஏ.என்.32 விமானம் காணாமல் போன நேரத்தில் பதிவான செயற்கைகோள் புகைப்படம் தேவைப்படுவதால், அமெரிக்காவின் உதவியை நாடியிருப்பதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 22-ஆம் தேதி, அந்தமான் போர்ட் பிளையருக்கு புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 வகை விமானம் மாயமானது. கடல் மட்டத்தின் மேல்பகுதியில் தேடியதில், விமானம் விழுந்த இடத்தையோ அல்லது அதன் பாகங்களோ கிடைக்கவில்லை.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு அடியில் விமானத்தைத் தேடும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், இந்தப் பணியில் இரு நாள்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விமானம் தேடும் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது. மேலும் கடலில் கிடைத்த பொருள்களை வைத்து ஆய்வு செய்து பார்த்தலில் மாயமான விமானத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்பாக அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், விமானம் மாயமானதாக கருதப்படும் பகுதியில் 3,300 அடி முதல் 4,000 அடிவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சுமார் 10 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மாயமான விமானத்தை தேடி கண்டுபிடிக்க தேவையான அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறோம். அமெரிக்கா செயற்கை இடைக்கண் ரேடார்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் பரந்த பார்வை வசதியை பெற்றிருப்பதால், அந்த நாட்டின் உதவியை மத்திய அரசு நாடி உள்ளது. விமானம் மாயமான போது அடர்ந்த மேகக்கூட்டங்கள் இருந்த சூழ்நிலையில் கூட அமெரிக்க செயற்கைக்கோள்களால் சிக்னல்களை எடுத்துக் கொள்ள முடியும்.
விமானம், திடீரென மாயமானது பற்றி நான் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசினேன். அவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். விமானம் ரேடாரில் மறைந்து போவதற்கு முன்பாக சாய்ந்து, 23 ஆயிரம் அடியில் இருந்து மிக வேகமாக கீழே இறங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் இருந்து ஆபத்து குறித்த கடைசி தகவல் உள்ளிட்ட எந்த தகவலும் பெறப்படவில்லை.
விமானம் மாயமான நேரத்தில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படம், பதிவான சிக்னல்கள் தேவைப்படுகிறது. செயற்கைகோளின் புகைப்படத்தை அமெரிக்காவிடம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications