அக்னி -1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
பாலசோர், ஒடிஷா: இந்தியா தனது அணு ஆயுத ஏவுகணையான அக்னி -1 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது.
700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை பெற்றது அக்னி-1 ஏவுகணை. இன்று ஒடிஷா மாநிலம் பாலசோரில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ராணுவத்தின் சார்பில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய இந்த அக்னி-1 ஏவுகணை, திட எரிபொருளால் இயங்கக் கூடியதாகும். நடமாடும் லாஞ்சரிலிரு்து இன்று காலை 9.15 மணிக்கு ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
வீலர் தீவில் (தற்போது இதன் பெயர் அப்துல் கலாம் தீவு) உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை செலுத்தும் தளத்தில் இச்சோதனை நடைபெற்றது.
சோதனை முழு. வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தனது இலக்கை ஏவுகணை 9 நிமிடம் 36 விநாடிகளில் எட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
அக்னி-1 ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
12 டன் எடை கொண்ட அக்னி -1 ஏவுகணை, 15 மீட்டர் நீளம் கொண்டது. ஒரு டன்னுக்கும மேற்பட்ட பேலோடை இதில் ஏற்றிச் செல்லமுடியும். பேலோடைக் குறைத்தால் இதன் தாக்குதல் தூரத்தை அதிகரிக்க முடியும்.
கடைசியாக 2015ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி அக்னி-1 ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. அப்போதும் அந்த சோதனை வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications