அக்னி 2- ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: இந்தியா தனது அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 2 ஏவுகணையை இன்று ஏவிப் பரிசோதித்தது.

ஒடிஷாவின் வீலர் தீவில் வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இது வழக்கமான சோதனை. இதில் ராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் என்று ஒடிஷாவில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணைப் பரிசோதனை தளத்தின் இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்தார்.
நடுத்தர ரக ஏவுகணையான அக்னி 2, 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கக் கூடியதாகும். இது ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications