அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
பலசூர்: அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை ஒடிஷாவின் சந்திபூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாக நடந்தது.
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை ஒடிஷா மாநிலத்தில் உள்ள சந்திபூர் ஏவுதளத்தில் இன்று காலை 9.14 மணிக்கு வெற்றிகரமாக நடந்தது.

இந்த ஏவுகணை 500 முதல் 1,000 கிலோ வரையிலான எடை கொண்ட அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கிமீ தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கும் சக்தி கொண்டது. ஏற்கனவே ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பிரித்வி 2 ஏவுகணையில் அவ்வப்போது புதிய மாற்றங்களை செய்து சோதனை செய்யப்படுவது வழக்கம்.
இன்றைய சோதனையில் ஏவுகணை இலக்கை சரியாகத் தாக்கியது என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இதே சந்திப்பூர் ஏவுதளத்தில் பிரித்வி 2 சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications