ஜார்க்கண்ட்டில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ந் தேதி எண்ணப்படுகின்றன.

இன்று 5வது கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே- சிசிரோ போஸ்ட் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு:
பாரதிய ஜனதா கட்சி 41 முதல் 49 தொகுதிகள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 15 முதல் 19 இடங்களையும் காங்கிரஸ் கட்சி வெறும் 7 முதல் 11 இடங்கள் வரையும் கைப்பற்றுமாம்.
இதர் கட்சிகள் 8 முதல் 12 இடங்களில் வெல்லுமாம்.
2009 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 23 இடங்களைத்தான் பெற்றிருந்தது. தற்போது தனிப்பெரும்பான்மையுடன் 41 முதல் 49 இடங்கள் வரை வெல்லும் என்பது அக்கட்சி மிகப் பெரிய வெற்றியாகும்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 2009 தேர்தலில் 28 இடங்களைப் பெற்றிருந்தது. தற்போது 7 இடங்கள்தான் என்கிற போது மிகப் பெரிய பின்னடைவாகும்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைப் பொறுத்தவரையில் தன்னுடைய வாக்கு வங்கியைத் தக்க வைத்திருக்கிறது என்றே சொல்ல முடியும். 2009 தேர்தலில் அக்கட்சி 18 இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications