தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.. கூட்டாக எச்சரித்த இந்தியா, அமெரிக்கா!
தீவிரவாதிகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா சார்பில் கூட்டாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தீவிரவாதிகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா சார்பில் கூட்டாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர், இந்தியா வந்துள்ளனர்.

இவர்கள் டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவுடனான உறவு தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில் கூறியிருப்பதாவது, இரு தரப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அமைச்சர்கள் உறுதி ஏற்றுள்ளனர்.
இந்தியா அமெரிக்காவின், முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என்பதை உறுதி செய்த அமைச்சர்கள், பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மற்ற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதிகள் தங்களது மண்ணில் செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். மும்பை, பதன்கோட், உரி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications