போருக்குத் தயாராக இருங்கள்.. வீரர்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி எச்சரிக்கை
எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போது போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி: நம் நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போது போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ தொலைத்தொடர்பு பற்றிய 2 நாள் கருத்தரங்கு டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராணுவத் தளபதி பிபின் ராவத் பேசுகையில், நம் நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும்வகையில் எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது: ராணுவத்தில், நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் புகுத்த வேண்டும். ராணுவத்துக்கு தேவையான ஆயுதக் கொள்முதல் செய்வதற்குத் தேவையான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்.
ராணுவத்துக்கு தேவையான தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் எளிமையாக, குறைவான எடை கொண்டதாக, சுலபமாக பராமரிக்கும் வகையில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பம் எந்த ஒரு தட்பவெப்ப சூழ்நிலையிலும் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
சமூக வலைதளங்களை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, ராணுவத்தினர் இடையிலான தொலைபேசி உரையாடல் மற்றும் தரவு பரிமாற்ற நடைமுறையை பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications