போருக்குத் தயாராக இருங்கள்.. வீரர்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி எச்சரிக்கை
எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போது போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி: நம் நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போது போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ தொலைத்தொடர்பு பற்றிய 2 நாள் கருத்தரங்கு டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராணுவத் தளபதி பிபின் ராவத் பேசுகையில், நம் நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும்வகையில் எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது: ராணுவத்தில், நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் புகுத்த வேண்டும். ராணுவத்துக்கு தேவையான ஆயுதக் கொள்முதல் செய்வதற்குத் தேவையான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்.
ராணுவத்துக்கு தேவையான தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் எளிமையாக, குறைவான எடை கொண்டதாக, சுலபமாக பராமரிக்கும் வகையில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பம் எந்த ஒரு தட்பவெப்ப சூழ்நிலையிலும் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
சமூக வலைதளங்களை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, ராணுவத்தினர் இடையிலான தொலைபேசி உரையாடல் மற்றும் தரவு பரிமாற்ற நடைமுறையை பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications