ராஜஸ்தானில் மீண்டும் வெடித்து சிதறிய மிக் -21 விமானம்.. பாராசூட் மூலம் தப்பிய பைலட்!
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -21 விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -21 விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சமீப காலமாக இந்தியாவில் விமான படைக்கு சொந்தமான விமானங்கள் வெடித்து சிதறுவது வழக்கமாகி வருகிறது. தொடர்ச்சியாக இது போல நிறைய விபத்து நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்று ராஜஸ்தான் அருகே ஜோத்பூர் சிரோஹி என்று பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
மிக் -21 ரக விமானம் இப்படி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானம் கட்டுப்பாட்டை இழந்த நொடியில் விமானி துரிதமாக செயல்பட்டு பாராசூட் மூலம் தப்பித்தார்.
இதனால் அவர் உடலில் லேசான காயங்களுடன் தப்பித்தார். தற்போது இந்திய விமானப்படை அதிகாரிகளும், போலீசாரும் அங்கு சோதனை செய்து வருகிறார்கள்.
இது இதே வருடத்தில் நடக்கும் மூன்றாவது விபத்தாகும். சில நாட்களுக்கு முன் பெங்களூரில் இந்திய விமானப்படை விமானங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்து காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. அதன்பின் ராஜஸ்தானில் இதேபோல் மிக் -21 ரக விமானம் இப்படி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. தற்போது மீண்டும் மிக 21 விபத்திற்கு உள்ளாகி உள்ளது.