ராணுவத்தின் தொடரும் அதிரடி வேட்டை... அன்று மியான்மர்... இன்று பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்!
டெல்லி: இந்திய ராணுவத்தினரை தாக்கிவிட்டு மியான்மரில் பதுங்கியிருந்தாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலைமறைவாக இருந்தாலும் எல்லை தாண்டி வேட்டையாடப்படுவது தீவிரவாத இயக்கங்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரும் ஆயுத குழுக்கள் உள்ளன. இந்த ஆயுதக் குழுவினர் கூட்டாக இணைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் மொத்தம் 18 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு அண்டை நாடான மியான்மரில் உள்ள முகாம்களுக்குள் போய் இந்த தீவிரவாதிகள் பதுங்கிக் கொண்டனர்.

மியான்மருக்குள் நுழைந்து தாக்குதல்..
இந்திய ராணுவம் அண்டை நாட்டுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தும் என்று தீவிரவாதிகள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நமது ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களிலேயே மியான்மருக்குள் இரவோடு இரவாக நுழைந்து 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அதிரடியாக வேட்டையாது ராணுவம்.

யூரியில் பாக். தீவிரவாதிகள்...
தற்போது யூரி பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள்...
இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இம்முறை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர்.

பீதியில் பயங்கரவாதிகள்
மொத்தம் 3 தீவிரவாத முகாம்கள் இத்தாக்குதல்களில் அடியோடு அழிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினால் எல்லை தாண்டி பதிலடி தரும் இந்தியாவின் அதிரடியால் தீவிரவாதி இயக்கங்கள் பீதியில் உறைந்து போயுள்ளன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications