இந்திய வீரர்களை கொன்றதற்கு பதிலடி.. பாக். ராணுவம் மீது இந்திய ராணுவம் ஆவேச தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: இந்திய வீரர்கள் 3 பேர் பாகிஸ்தான் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடந்து அந்நாட்டிற்கு எதிராக கடும் தாக்குதலை தொடங்கி இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் எல்லையில் செவ்வாய்க்கிழமை இந்திய வீரர்கள் 3 பேர் பாகிஸ்தான் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்நாட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கும நடவடிக்கையில் இந்திய ராணுவம் இறங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Indian army has launched a major counter offensive against pak.

மச்லி, ரஜ்சோரி பூனாச்சா ஆகிய ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் மீதான அதிரடித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 வாரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் 2வது முறையாக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதில் ஒருவரது தலையை துண்டித்துள்ளனர்.

கடந்த 3 வாரத்திற்கு முன்னதாக மன்தீப்சிங் என்ற வீரரை பாகிஸ்தான் வீரர்கள் தலையை துண்டித்து கொன்றனர்.

எனவே, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் அதிரடித் தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கடும் விளைவுகளை சந்திப்பார்கள் என்றும் இந்திய தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+