நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறியுள்ளது: மோடி பேச்சு
டெல்லி: 17 மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இருந்த நிலையைவிட இந்தியா தற்போது பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லியில் பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
அனைத்து வகை பொருளாதார குறியீடுகள் அடிப்படையிலும் இந்தியா முன்னேறி வருவது தெளிவாக தெரிகிறது. 17 மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இருந்த நிலையைவிட இந்தியா தற்போது வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளன. நடப்பு நிதி பற்றாக்குறை குறைந்துவிட்டது.
வங்கி நடைமுறையின்கீழ், நாட்டின் 190 மில்லியன் மக்களை கொண்டுவர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் வங்கி கணக்குகளில் ரூ.26000 கோடி பணம் இருப்பு உள்ளது.
உலக பொருளாதாரம் மோசமான சூழ்நிலையில் இருக்கும் இந்த நிலையிலும், தொடர்ச்சியான நல்ல பல திட்டங்களால் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.
நிதி ஆயோகா என்ற அமைப்பு, திட்ட கமிஷனில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இது ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்படும்.
இவ்வாறு மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications