மின்சாரம் "கம்" டீசல் என்ஜின்கள் - இந்தியாவிலேயே தயாரிக்க ரயில்வே துறை முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கும் ரயில் என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வே துறையில் தற்போது 52 சதவீதம் டீசல் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தி, பயண நேரத்தை குறைக்க டீசல் என்ஜின்கள் படிப்படியாக மின்சார என்ஜின்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் ஒரே என்ஜினை இந்தியாவில் முதன் முறையாக தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

Indian railway plans to produce power engines

இது குறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள், "அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தற்போது டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் ஒரே என்ஜின் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. எனவே இந்தியாவிலும் இந்த வகை என்ஜின்களை தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்து இருக்கிறது.

இதற்கான திட்டம் குறித்த பரிந்துரை ரயில்வே வடிவமைப்பு ஆய்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால் வாரணாசியில் 4,500 குதிரை திறன் கொண்ட 5 என்ஜின்கள் தயாரிக்கப்படும். இந்த வகை என்ஜினை தயாரிக்க ரூபாய் 18 கோடி செலவு ஆகும்.

இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டவுடன் மின்சார என்ஜின் ரயில்கள் செல்லும் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். டீசல் எஞ்ஜினை விட அதிக எடையுள்ள இந்த என்ஜின் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+