காஷ்மீர் பனிச்சரிவு.. பனியில் சறுக்கி பாக். எல்லையில் விழுந்த இந்திய ராணுவ வீரர்.. தேடுதல் வேட்டை!
காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் பனிச்சரிவில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ராஜேந்திர சிங் நெஹி, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார்.
ஸ்ரீநகர்: காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் பனிச்சரிவில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ராஜேந்திர சிங் நெஹி, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார். இவரை தேடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் கடும் பனிப்பொழிவு நிகழந்து வருகிறது. இதனால் காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி பனிச்சரி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் இருந்த ராணுவ டென்ட் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் ஒருவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேபோல் சோன்மார்க் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 பொதுமக்கள் சிக்கி பலியானார்கள். இந்த நிலையில் குல்மார்க் பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் வலுக்கி இந்திய ராணுவ வீரர் ராஜேந்திர சிங் நெஹி கீழே விழுந்தார்.
இவர் அந்த பனிச்சரிவில் சிக்கி, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டார். குல்மார்க் அருகே இருக்கும் பாகிஸ்தான் எல்லையில் இவர் விழுந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ராஜேந்திர சிங் நெஹி இந்திய ராணுவத்தில் 2002ல் இருந்து பணியாற்றி வருகிறார். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்த விஷயம் குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை. ராஜேந்திர சிங் நெஹியை பாகிஸ்தான் எல்லையில் பார்க்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
அவரை நாங்கள் கஷ்டடியில் எடுக்கவில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இதனால் ராஜேந்திர சிங் நெஹிக்கு என்ன ஆனது என்று அவரின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications