இன்டிகோ விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல்... பயணிகள் பீதி!
அதிர்ஷ்டவசமாக அனைவரும் எந்தப் பிரச்சினையும் இன்றி தரையிறஹ்கினர்.
விமானத்தின் காக்பிட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிதான் விரிசலடைந்தது. நடு வானில் திடீரென கிளம்பிய தூசி மற்றும் ஐஸ் துகள்கள் மோதியதால் இந்த விரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த யாருக்கும் இந்த கண்ணாடி விரிசலால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும் விசாகப்பட்டனம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
புவனேஸ்வரிலிருந்து நேற்று பிற்பகல் 1.33 மணிக்கு இந்த விமானம் விசாகப்பட்டனத்திற்குக் கிளம்பியது. விசாகப்பட்டனம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. கண்ணாடியின் வெளிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக விமானியிடமிருந்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்த்து. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விமானி மேற்கொண்டார். அதன் பின்னர் பிற்பகல் 2.35 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
மறு மார்க்கத்தில் வேறு விமானம் மூலம் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.