பாலியல் வன்கொடுமை செய்து...தண்டவாளத்தில் வீசினார்கள்..போலீசில் பொய் புகார் கொடுத்த கல்லூரி மாணவி!
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஒரு கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் ரெயில் தண்டவாளத்தில் வீசியதாக போலீசில் பொய் புகார் கொடுத்தார்.
விசாரணையின் போது அந்த மாணவியின் கூற்றுக்கள் ஆதாரமற்றவை மற்றும் முரண்பாடானவை என்பதும் அவர் கொடுத்தது பொய் புகார் என்றும் போலீசார் கண்டறிந்தனர்.
பொய் புகார் கொடுத்த மாணவி மீது 182/211 பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை புகார்
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் 19 வயதான கல்லூரி மாணவி ஒரு புகார் கொடுத்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய முன்னாள் காதலன், நந்திகிராமில் உள்ள ஒரு வீட்டிற்கு என்னை அழைத்து சென்றான். அங்கு முன்னாள் காதலனும், அவரது நண்பர்களும் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ஆதாரம் இல்லை
மேலும் கத்தியால் குத்தி, ஒரு சாக்கில் கட்டிப்போட்டு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்றனர். நான் தப்பித்து வந்து விட்டேன் என்று புகாரில் கூறியிருந்தார் அவர். இது தொடர்பாக இந்தூர் போலீசார் கடத்தல், கற்பழிப்பு, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

மாணவி பொய் புகார்
இதனை தொடந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவி பொய் புகார் கொடுத்தது போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக இந்தூர் போலீஸ் ஐ.ஜி.பி ஹரிநாராயண் சாரி மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:- கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் 150 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி.யின் காட்சிகள் சோதனை செய்யப்பட்ட்டது.

மாணவி மீது வழக்குப்பதிவு செய்யப்படும்
பர்தேசிபுரத்திலிருந்து பங்கங்கா வரையிலான ரெயில் தண்டவாள பகுதிகளில் தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டன. இந்த பாலியல் வன்கொடுமை நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. விசாரணையின் போது அந்த மாணவியின் கூற்றுக்கள் ஆதாரமற்றவை மற்றும் முரண்பாடானவை, அவர் கொடுத்தது பொய் புகார் என்று போலீசார் கண்டறிந்தனர், அந்த மாணவி மீது 182/211 பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறினார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications