துணிக் கடை திறப்பு விழாவுக்கு வராமல் ரூ 29 லட்சம் பெற்றதாக மோசடி புகார்.. சன்னி லியோனிடம் விசாரணை!
கொச்சி: கொச்சியில் துணிக் கடை திறப்பு விழாவுக்கு வருவதாக கூறி ரூ 29 லட்சம் மோசடி செய்ததாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது போலீஸார் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இவர் மம்முட்டி நடித்து வரும் மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படங்களில் நடிப்பதுடன் இவர் பல்வேறு கடைத் திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.
அது போல் திருவனந்தபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஒரு கடையை திறக்க வந்த போது அந்த இடத்தில் அவரை காண லட்சக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு எழுந்தது.

ட்விட்டர்
கொச்சியில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். கொச்சியில் ஒரு கடைத் திறப்பு விழாவுக்கு அவர் வந்த போது அவரை காண அண்டைய மாவட்ட மக்களும் குவிந்தனர். அப்போது We Love Sunny Leone என உற்சாகமாக முழங்கினர். இதை பார்க்க சன்னி, ஆனந்தக் கண்ணீரில் மிதந்து சென்றார். இந்த சம்பவத்தை சன்னி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.

கணவர், குழந்தைகள்
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சன்னி கேரளாவுக்கு வருகை தந்திருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்த ஷியாஸ் என்ற இளைஞர் கேரளா டிஜிபியிடம் ஒரு புகார் தெரிவித்திருந்தார். அதில் நடிகை சன்னி லியோன் கொச்சியில் துணிக் கடை திறப்பு விழாவுக்கு வருவதாக கூறினார்.

ஷியாஸ்
இதற்காக அவருக்கு ரூ 29 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் கூறிய நாளில் விழாவுக்கு கடை திறப்பு விழாவுக்கு வரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னிடம் வாங்கிய பணத்தை பெற்று தர வேண்டும் என கோரி ஷியாஸ் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

உத்தரவு
இதையடுத்து சன்னியிடம் விசாரணை நடத்துமாறு கேரளா டிஜிபி கொச்சி குற்றப்பிரிவு போலீஸுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சன்னி லியோனிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications