சென்னை கப்பல் விபத்து பற்றி விசாரிக்க குழு அமைப்பு: கட்கரி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை, கப்பல் விபத்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், விசாரணை குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடலில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற உதவிய பள்ளி மாணவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

கப்பல்கள் மோதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணைக்கு பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே அமைச்சர் கருப்பண்ணன் கூறுகையில், எண்ணை கசிவால், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும். எண்ணூர் துறைமுகத்தில் பரவியுள்ள 60 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம், எஞ்சிய 20 டன் கழிவுகள் இன்று மாலைக்குள் அகற்றப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications