மோடி அமைச்சரின் ராமரின் பிள்ளைகள் பேச்சு... மக்களிடையே கடும் அதிருப்தி!
பெங்களூர்: இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ராமரின் பிள்ளைகள் என்று மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளமத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசியுள்ள பேச்சு மக்களைக் கவரவில்லை. இது இந்துக்கள் அல்லாத பிற மத மக்களை புண்படுத்தும் என்று ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சாத்வியின் இந்தப் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதேசமயம், ஆளுங்கட்சியினரும் கூட சாத்வியின் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை. சாத்வியைக் கண்டித்தும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்ஸ்டாவானி என்ற அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை இதுதொடர்பாக நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் விவரம்.
இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களிடம், அரசியல் தலைவர்களின் இதுபோன்ற பேச்சுக்கள் பிற மதத்தவரை புண்படுத்துமா, அவர்களுக்கு விரோதமாக போகுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆம் என்று 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 37 சதவீதம் பேர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். 23 சதவீதம் பேர் புண்படுத்தாது என்று கூறியுள்ளனர்.

டெல்லியில் சாத்வியின் பேச்சுக்கு 43 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 21 சதவீதம் பேர் சாத்வி பேச்சு சரி என்று கூறியுள்ளனர்.
மொத்தம் 720 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகளை இன்ஸ்டாவானி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications